Saturday, July 8, 2023

சுவிசேஷக் கதை ஏசுவின் யூதர்களுக்கு மட்டுமே

புதிய ஏற்பாடு தொன்மத்தில் ஏசுவின் கதை கூறும் சுவிசேஷக் கதைகளில் சீடரை அனுப்புகையில் ஏசு சொன்னதாக உள்ளது.

மத்தேயு10:5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்.. 

ஏசு சீடரோடு இயங்கியபோது யூதரல்லாத ஒரு கிரேக்க பெண்ணிடம் ஏசு நடந்து கொண்ட இனவெறி கதை.

yuu%2B%25281%2529.jpg

மத்தேயுசுவிசேஷக் கதையில் 

yu%2B%25281%2529.jpg

மாற்கு எழுதிய சுவிசேஷக் கதையத் தழுவியே மத்தேயுவும், லூக்காவும் தங்கள் சுவிசேஷத்தை வரைந்துள்ளமையால் இவை ஒத்த கதையமைப்பு (Synoptic Gospels) சுவிசேஷம் எனப்படும்.ஆனால் லூக்கா சுவிசேஷக் கதாசிரியர் இந்தக் கதை எழுதவே இல்லை – ஏன் என ஒரு பைபிளியல் அறிஞர் நூல் அழகாய் விளக்குகிறது

yus%2B%25281%2529.jpg

ஏசு எல்லா யூதர்களையும் சமமாக பார்த்தாரா – அதையும் பார்ப்போம், யோவான் சுவியில் உள்ள கதையில் -சமாரியர் எனப் படுபவரும் யூதர்களே, பழைய ஏற்பாடு கதைகளில் உள்ள மானசே & எபிராயிம் கோத்திரத்தினர், ஆனால் பொமு.110ல் நடந்த போரின் பின்பே அரசியல் பிரிவால் பிரிந்தவர்கள், சமாரியர் யாவே கர்த்தர் கோவில் கெர்சிம் மலையில் உள்ளதே யூதர்களின் தொன்மையான ஆலயமும் ஆகும், இந்த பொமு.110  போருக்கு பின் தான் எபிரேய நியாப் பிரமாணங்களில் ஜெருசலேம் ஆலயம் மட்டுமே எனும்படி மாற்றப்பட்டது என்பதை சாக்கடல் சுருள்கள் உறுதி செய்துள்ளன

yusi%2B%25281%2529.jpg

ஏசுவின் போதனைகளை நாம் பார்த்தால் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு யூதர் அல்லாத கிரேக்க பெண்ணிடம் மட்டுமின்றி தன் யூத சகோதர்களையே இழிவாய் அருவருப்பாய் பேசுவதை காண்கிறோம். 

நாம் இவற்றை சுட்டிக் காட்டினால் உடனே லூக்கா கதையில் உள்ள நல்ல சமாரியன் கதை காட்டுவர் மழுப்பலாளர், இதைப் பற்றி பைபிளியலாளர் நூலில் கூறுவது

yusid%2B%25281%2529.jpg

பழைய ஏற்பாடு மோசே சட்டங்கள்படி யூதர்களின் 12 ஜாதிகளும் அவரவர் ஜாதிக்கு உள்ளே மட்டுமே பெண் கொடுத்து திருமணம் எனவும் சட்டம் உள்ளது. லேவி 19:18  எடுத்து ஏசு சொன்னதாக உள்ள மூல ஹீப்ரு வசனத்தின் மொழிபெயர்ப்பு

http://www.zenzoneforum.com/threads/23705-Love-Your-(Jewish)-Neighbour 

 "Love your neighbor as yourself. — Jesus 22:36-40

As it turns out, this extremely famous quote is not at all what it seems. The word “neighbor” is an incorrect translation of the original word — reyacha. Rather than mean “a fellow human”, which is how most Christians are taught to accept the word “neighbor”, reyacha actually means “fellow Jew“.இஸ்ரேலிற்கு உரிய தேவன் மட்டுமே, என்பதும், அந்த எல்லைக்கு உரிய சிறு தெய்வம் இஸ்ரேலிற்கான அருவருப்பானவர் யாவே கர்த்தர்- என்பதும் உன் பக்கத்து யூதரை மட்டுமே என்றார் 

மாற்கு 12:31 ஏசு - நீ உன் மீது அன்பு கொள்வது போல் உன் அருகில் உள்ள மற்ற 11 ஜாதி யூதர்கள் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை(லேவி 19:18) 

அதற்குமுன் நாம் ஏசு காலத்திற்கு முன்பிருந்து ன்று வரை யூதர்கள் தினசரி கூறும் ஜெபம்- ஏசுவும் சொல்லியிருக்க வேண்டியது.

Sedur (Jewish prayer book).This prayer is said every morning by millions of Jews around the world. The exact prayer is this:-

"Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile." "Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave."       Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.   "யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே என்னை ஒரு புறஜாதியாக்காததற்காக நீர் பாக்கியவான்"

"யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே -என்னை அடிமை ஆக்காததற்காக நீர் பாக்கியவான்." 

"யாவே கர்த்தரே, உலகின் ஆண்டவரே -என்னை பெண்ணாக     படைக்கததால் நீர் பாக்கியவான்                                                                       (புறஜாதியாக-உலகைப் படைத்த கடவுளை நம்பும் இறைவனின் புதல்வர்கள்)

யூதர் அல்லாதவர் நட்பு எனும் எந்த ஒரு சம்பவமும் மாற்கு சுவிசேஷக் கதையில் இல்லை; இது மட்டும் இல்லாமல் மாற்கு & மத்தேயுவில் உள்ள யூதர் மட்டுமே என்பவற்றை நீக்கி; லூக்கா தானாக புற இன நட்பு கதைகளை சொருகி உள்ளார்.

பவுல் என்பவர் ஏசு சீடர்களை துன்புறுத்தியவர் எனவும் ஸ்டீபன் கொலைக்கு காராண்மானவர் என்பவர்- பின் ஏசுவைத் தெய்வீகர் எனப் பரப்பி தனக்கு பண வசூல் செய்ததை கடிதங்கள் கூறுகின்றன. பவுல் மரண தண்டனையில் இறந்த ஏசுவை யூதக் கிறிஸ்து என்ற போதே - தாவீது பரம்பரையின் விந்தணுவில் பிறந்தவர் என்றார். இது உபாகம வசனம் 17:14- 15 மற்றும் அது பிற்காலத்தில் யூதா ஜாதியின் தாவீது பரம்பரை எனச் 2 சாமுவேல் 7: 16  சுருங்கியதையையும் ஏற்றதே. சுவிசேஷக் கதை முழுவதையும் ஆராய்ந்த ஏசு – கதை முழுவதும் யூதர்கள் உள்ள பகுதிகளுக்குள் மட்டுமே இயங்கினார் என மழுப்பலாளர் ஜோஷ் மெக்டவல் நூலில் காட்டுகிறார் 

yusidd%2B%25281%2529.jpg

மத்தேயு 5:19 ,“ஒருவன் மோசேயின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.

 மத்தேயு 23:2 2 ,“பைபிளிய யூதப் பாதிரியும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும்.

 

ஏசு சுவிசேஷக் கதைகளின்படியே தான் அமைக்கும் பரலோகம் என்பது யூதர்களுக்கு மட்டுமே எனவும், 12 அப்போஸ்தலர் யூத 12 ஜாதிகளை மேய்ப்பர் என்றார்.

மத்தேயு 19:28 சு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப் படும்பொழுது, மனித குமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின் பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள்.  நீங்கள்      12 அரியணைகளில்  அமர்ந்து, இஸ்ரவேலின் 12   ஜாதிகளுக்கும் நீதி செய்வீர்கள்.

இது நல்ல சமாரியன் கதை இடைச்செருகல் செய்த லூக்காவிலும் உள்ளது
லூக்கா 22:30 ஏசு- என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு ஜாதிகளையும் நியாயம் தீர்ப்பீர்கள்.

ஏசுவின் பரலோக ராஜ்ஜியம் யூதர்களுக்கு மட்டுமே 

பவுல் முதலில் யூதர்களை நோக்கியும், பிறகு கிரேக்கர் யூதர் அல்லாதவர் இடையேயும் மத வியாபாரம் செய்து காசு பண்ணிடவும், உலகம் தன் வாழ்நாளில் அழியும் என்ற போதனையுமே செய்தார். ஆனால் பவுல் கடிதங்களுக்கு பின்பான வெளிப்படுத்தின விசேஷங்கள் கதையில் 


வெளி 7:4 பிறகு முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கேட்டேன். இஸ்ரவேலின் பன்னிரண்டு  குடும்பக் ஜாதிகளிலிருந்து அவர்கள் 1,44,000 பேர் இருந்தார்கள். 
வெளி14:1 சீயோன் மலைமீது நின்று கொண்டிருந்த  ஆட்டுக்குட்டி னவர் முன்பாக ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள்(ஒவ்வொரு  யூத ஜாதி 12ல்  லிருந்து 12000) பெண்களோடு உடலுறவு கொண்டு  தம்மை மாசு படுத்திக் கொள்ளாதவர்கள்.
வெளி 21: 12 ஏசுவின் புதிய ஜெருசலேம் தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு ஜாதிகளின் ஒரு ஜாதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. 13 கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. 14 நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

ஏசுவின் பரலோகத்தில் யூத ஜாதி 12ல் இருந்து பெண்ணை தொடாத 1,44,000 ஆண்களுக்கு மட்டுமே

No comments:

Post a Comment

யோவான் ஸ்நானன் இயேசுவை நிராகரித்தார்!

இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவி - மாற்கு, ஞானஸ்நானி யோவனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபோது பரிசுத்த ஆவி மேலே வந...